Saturday 16 February 2013

நட்பு


வரைவிலக்கணம் அற்ற செம்மொழி
முடிவுகள் இல்லாத வான்வெளி
இருபாலினர்க்கும் இருக்கும் கற்பு
நிஜங்கள் நிறைந்த நட்பு...!!!

வெறுத்தாலும் விட்டுக்கொடுக்கும்
அடித்தாலும் அரவணைக்கும்
அருகில் இருந்தால் ஆர்ப்பரிக்கும்
தொலைவில் சென்றாலும் தொடரும் நட்பு...!!!

இதிகாச நட்பும் இணை நிற்காத
துணை நின்று சுமக்கும் நம் நட்பு
குறுஞ்செய்திகளில் குறள்கள் எழுதும்
வள்ளுவன் எழுதாத நான்காம்பால்
நாம் மட்டுமே உணர்ந்த "நட்பின்பால்"...!!!!!!!!