Saturday 1 March 2014

சிறகொடிந்த பறவை


மெல்ல விலகிச் சென்றாய்
கொள்ளை நினைவால் கொன்றாய்
சொல்லித் தீராத எரிவு
சொல்லாத உந்தன் பிரிவு

நெய்தல் சேராத நெடு நதியாய்
Viber இல்லாத வாலிபனாய்
குகனை இழந்த இராமனாய்
கொஞ்சமும் இல்லாத குபேரனாய்

குவியத்தில் குவிக்காத வில்லையாய்
குழம்பி குமிறும் பிள்ளையாய்
கண்ணீரில் இமைகள் மூழ்கும்
காலமும் கேலி பாடும்

நீள வான் இருந்தாலும்
மீளும் நினைவுகளுடன்
கூனிக் குறை நினைக்கும்
சிறகொடிந்த பறவையானேன்