Saturday 20 July 2013

உவமையவள்

இரவிலும் தெரியும் வானவில்
பகலிலும் தெரியும் விண்மீன்
பூவின் தேனிலும் இனிதான மது
மழலை தோலிலும் மென்மையான மாது

வதனமது பனிமலை அதில்
கண்களோ Penguin பறவை
கூந்தலானது கறுப்பு நீர்வீழ்ச்சி
புருவங்களோ என்மீது வாள்வீச்சு

அவளின் அழகில் தொலைந்து
புன்னகை மழையில் நனைந்து
வர்ணித்து பாடும் வாலி அல்ல நான்
குடி வெறியில் உழறும் போலி

No comments:

Post a Comment