Wednesday 16 October 2013

சமர்ப்பணம்


முகமதை நினைத்தே முயற்சிகள் சில
அகமதை நினைத்தே எழுத்துக்கள் பல
கனிமொழி கேட்டே வார்த்தைகள் சில
கருவிழி பார்த்தே கவிதைகள் பல

கனவிலே உன்னுடன் காதல்
நனவிலே தினமும் சாதல்
நினைவிலே உன்னால் வாடல்
நிஜத்திலே உன்மீது பாடல்

கானல் நீரில் மீன் வளர்த்தேன்
காற்று இன்றி குழல் இசைத்தேன்
கண்ணை மூடி காதல் செய்தேன்
பெண்ணே நானும் கவிஞன் ஆனேன்

No comments:

Post a Comment