Monday 3 February 2014

கலையரங்கம்



அரங்கத்தின் மேலே பிறை நிலா
அரங்கம் உள்ளே பெண் நிலா
புன்னகை அணிந்த அவளுக்கு
பிற நகை அணிய அவசியமா?

மஞ்சள் கலந்த ஆடை
மங்கை இவளோ நீரோடை
மரித்தாலும் மறக்காத கனவு
மறுத்தாலும் உருக்கும் நினைவு

இளங்காற்றும் கூந்தல் வருட
இசைப்பாட்டும் இவளை நினைக்க
இரவோடு இவள் வெளிச்சம்
விண்மீனின் ஒளி மிச்சம்

No comments:

Post a Comment