Saturday 22 February 2014

விழித்துக்கொள்


பரம்பரைகளாய் படரும் சாதிவெறி
பற்றிக்கொண்டு எரியும் தீப்பொறி
திருந்தாத மக்கள் மத்தியில்
திணரும் ஒரு தீக்குரல்

ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பி
ஒற்றுமையை விரும்பும் சிலர்
சாதியை கரைத்துக் குடித்து
சாதாரணமாய் சாகும் பலர்

சாதியில் தாழ்ந்தவன் சாத்தான்
குலத்தில் குறைந்தவன் குற்றவாளி
குறும்பார்வை கொண்டவன் மத்தியில்
குறுடனாய் வாழும் மந்தைகள்

எத்தனை காலம் வந்து போனாலும்
பித்தனைப் போல் பிரித்து வைக்கும்
தலைக்கு மேல் வெள்ளம் போனாலும்
தரையை பற்றும் மந்திகள்

சாதியை உமிழும் ஊன் சதையே
பிறந்தது சாதியின் வயிற்றிலா அல்ல
உன் அன்னையின் வயிற்றிலா
பிறக்குமுன் அன்னையின் சாதி அறிந்ததுண்டோ?

No comments:

Post a Comment