Friday 11 December 2015

அலிபாபா...


முள் இல்லாத ரோஜா நீ
கறைகள் இல்லாத நிலவு நீ
தூறல் இல்லாத வானவில் நீ
பக்கவிளைவு இல்லாத மருத்துவம் நீ

நெடுங் கால பழக்கம்
குறள் போல இருந்தாலும்
கொல்லும் உன் நினைவுகள்
கொடியது பெண்ணே விடத்திலும்

மையல் கொள்ளும் என் இதயத்திற்கு
மௌனம் மட்டுமே வெளியில் காட்டும்
உன் இதயம் எனும் பொக்கிஷத்தை திறக்க
மந்திரம் தெரியாத அலிபாபா நான்.....

No comments:

Post a Comment