Tuesday 22 March 2016

தண்ணீர்

பூமி பரப்பில் மூன்றில் இரண்டு 
மனித உடலில் அரைக்கு மேல்
பல உயிரினங்களின் இருப்பிடம்
மனித உயிரின் பிறப்பிடம்

பொழியும் மழையாய் நகரும் நதியாய்
தேங்கிய கடலாய் உருகும் பனிப்பாறையாய்
உலகமே உயர்வாய் அறிந்து வியக்கும்
அனைத்திலும் உள்ள அகில கரைப்பான்

தவிக்கும் வாய்க்கு தண்ணீர்
பொழியும் வரை காத்திருக்க
சக்கரவாகப் பறவை இல்லை
சற்றும் பொறுக்கா மீன்கள்

புவியிலும் சரி செவ்வாயிலும் சரி
சுன்னாகத்திலும் சரி சுவிற்சர்லாந்திலும் சரி
உணவு உடை உறையுள் மட்டுமல்ல
அகில அடிப்படைத் தேவை தண்ணீரே

No comments:

Post a Comment